விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சப் சந்துரு தலைமையிலான காவல் துறையினர் நேற்று (செப்.8) மாலை ரோந்து சென்றனர்.
அப்போது பஸ் நிலைய வளாகத்தில் உள்ள பங்க் கடைகளில் குட்கா விற்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக சின்ன வடவாடி சந்திரகாசி மகன் சிவக்குமார், எருமனுார் சவுந்தரராஜன் மகன் முத்துக்குமரன், (32) ஆகியோரது கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சிவக்குமார், முத்துக்குமரன் ஆகியோரை கைது செய்தனர்.