கடலூர் மாவட்டம் ஊ. மங்கலம் அடுத்த மேற்கிருப்பு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (திருமணமாகாதவர்) அதியமான்குப்பம் முருகன் கோவில் அருகே உள்ள குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இவர் கோவிலில் தங்கியிருந்துள்ளார். குளிப்பதற்காக குளத்திற்கு சென்றபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஊ. மங்கலம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.