வேப்பூர் அருகே பொயனப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 40 வயது விவசாயி தேவராஜ், தொழுதூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகே மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர், வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.