பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையைச் சேர்ந்த சின்னம்மாள் (55) என்பவர், தனது மகன் ஆறுமுகம் மற்றும் மகள் அம்சவல்லி ஆகியோருடன் வேப்பூரிலிருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் சின்னம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.