விருத்தாசலம்: சிறுமியை கர்ப்பமாக்கிய கொத்தனார் மீது வழக்கு

8பார்த்தது
விருத்தாசலம்: சிறுமியை கர்ப்பமாக்கிய கொத்தனார் மீது வழக்கு
கம்மாபுரம் அருகே மும்முடிச்சோழகன் கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் கவியரசன், விருத்தாசலம் அருகே முதனை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து உல்லாசமாக இருந்துள்ளனர். தற்போது சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் கவியரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி