கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பரவலூரைச் சேர்ந்த சாமிநாதன் (32) வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய நிலையில், அவரது மனைவி ரம்யா (26) தற்கொலை செய்து கொண்டார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த இவர்களுக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ரம்யா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.