வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை குறிவைத்து புதுச்சேரியில் சைபர் கிரைம் மோசடி நடப்பதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். SIR பணிகளை சுட்டிக்காட்டி OTP எண்ணை கூறுமாறு அணுகும் சைபர் கிரைம் கும்பல், தப்பித் தவறி OTP எண்ணை சொல்லிவிட்டால் உங்கள் வங்கிக்கணக்கில் இருக்கும் பணமோ அல்லது உங்கள் தனிப்பட்ட தரவுகள் திருடப்படலாம் என கூறியுள்ளனர். இதுதொடர்பாக சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ அல்லது 1930 எண்ணிலோ புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.