துபாயில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வர இருந்த 300 பேர் கொழும்பு விமான நிலையத்தில் தவித்து வருகின்றர். டிட்வா புயல் காரணமாக சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படாததால், கடந்த 3 நாட்களாக பயணிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் 150 தமிழர்கள் உள்பட 300 பேர் பாதிப்படைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க இலங்கை மற்றும் இந்திய அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.