இந்தியாவில் சிலிண்டர் விலை ரூ.200 வரை உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் கணித்துள்ளார். ஈரான், இஸ்ரேல், அமெரிக்க போர் எதிரொலியால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நீடிக்கிறது. கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எல்பிஜி இறக்குமதி தடைபட்டுள்ளதால் இந்தியாவில் தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் விரைவில் விலை ரூ.200 வரை உயரக்கூடும் என ஆனந்த் கூறியுள்ளார்.