பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று 4 நாள் பயணமாக சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்துதவுலைட்ஸ்
இந்தியா வந்துள்ளார். வர்த்தகம், பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, கல்வி மற்றும் பின்டெக் உள்ளிட்ட பல்
வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து
பிரதமர் மோடியுடன் அவர் விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த பயணம் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பில் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.