கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆதரவு அமைச்சர் செலுவராயசாமி, இக்பால் உசேன், எச்.சி.பாலகிருஷ்ணா, சீனிவாஸ் உள்ளிட்டோர் இன்று (நவ., 21) டெல்லி செல்கின்றனர். இவர்களுடன் மேலும் 12 எம்எல்ஏக்களும் செல்வதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே தனது பதவி பாதுகாப்பாக உள்ளது என்றும் மக்களின் விருப்பப்படி 5 ஆண்டுகள் ஆட்சி செய்வோம் எனவும் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.