தமிழ்நாட்டில் பல அழகான நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. சில நீர்வீழ்ச்சிகள் அவற்றின் நிலப்பரப்பு, நீரோட்டம் மற்றும் சுற்றியுள்ள சூழல் காரணமாக ஆபத்தானவையாக அறிப்படுகின்றன. சில அருவிகளுக்கு அனுமதி இல்லாமல் செல்லக்கூடாது. காட்டாற்று வெள்ளம், பாதையில் சிரமம், வனவிலங்குகள், ஆழம் மற்றும் சுழல்கள் இருப்பதால் இந்த அருவிகள் ஆபத்தானவையாக கருதப்படுகிறது. இந்த அருவிகளின் ஆபத்துகளையே முன்கூட்டி அறிந்து பாதுகாப்பாக செல்ல வேண்டியது அவசியம்.