டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது பெண் ஒருவரை போலீஸ் அதிகாரி ஒருவர் அறைந்ததாக கூறப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட அந்த பெண்ணிடம் "போராடுவியா நீ.." எனக் கூறியபடி DCP தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, போராட்ட களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.