வினாத்தாள் கசிவு புகார்களைத் தொடர்ந்து
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தேர்வுக் கட்டணத்தைத் திரும்பப் பெற மாணவர்கள் வங்கி விவரங்களை சமர்ப்பித்து வருகின்றனர். இதுவரை சுமார் 13 லட்சம் மாணவர்கள் தங்களது வங்கி கணக்கு தகவல்களை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் விவரங்களை அளிக்காத மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பாக, வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு ஜூன் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு சற்றே நிம்மதி ஏற்பட்டுள்ளது.