சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டுள்ளார். இதில், ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனையுடன் ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நீதிபதி கூறுகையில், “சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை போதுமானதாக இருக்காது என கருகிறேன். உச்சபட்ச தண்டனை வழங்குவதே சிறந்தது. எதிர்காலத்தில் இதுபோல குற்றம் நடக்காதவண்ணம் தண்டனை இருக்க வேண்டும்” என்றார்.