நடிகை கஜோல் தனது பெயர் மற்றும் புகைப்படங்களை வணிக லாபத்திற்காக அனுமதியின்றி பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், நடிகை கஜோலின் பெயர் மற்றும் உருவத்தை ஒத்த ஏஐ புகைப்படங்களை வணிக ரீதியாக அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், அத்தகைய புகைப்படங்களை நீக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.