கரூர் சம்பவத்தை காரணம் காட்டி புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் ரோடு ஷோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பல முறை டிஜிபி மற்றும் முதல்வரை சந்தித்தும் அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படும் நிலையில், தற்போது பழைய துறைமுக வளாகத்தில் கூட்டம் மட்டும் நடத்திக்கொள்ள அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.