தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக இன்று செவ்வாய்கிழமை காலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்ற வளாகம் பரபரப்பாகியுள்ளது. வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனை நடைபெற்று வருகிறது.