தர்மபுரி: பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

83பார்த்தது
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 2 இன்று பள்ளிகள் துவங்கியுள்ள நிலையில் தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் நேற்று காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பள்ளி, கல்லூரி செல்வோர், அலுவலகம் செல்வோர் என பலரும் ஒரே நேரத்தில் கூடினர்.

இந்த நிலையில் ஜூன் 2 இன்று காலை 3 மணி முதல் தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் கலைகட்டியது. சேலம், திருவண்ணாமலை, ஓசூர், திருப்பத்தூர் செல்லும் அரசு பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் இன்று பயணிகள் நலனுக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதால் சிரமம் இல்லாமல் இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர். மேலும் பாதுகாப்பு கருதி காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி