தர்மபுரி மாவட்டத்தில் திமுக எம்பி மணியின் இல்ல திருமண விழாவில் இன்று (நவ.3) கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எஸ்.ஐ.ஆர் மூலம் சதி செய்ய திட்டமிட்டிருக்கும் தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடினார். மேலும் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக கூறிய பிரதமரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்தார்.