தர்மபுரியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பூசாரியாக பணிபுரியும் ரமேஷ் பாபு, அப்பகுதியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவர் 2 மாத கர்ப்பமாக இருந்ததும், கருவில் குழந்தை இறந்துவிட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக தர்மபுரி நகர மகளிர் காவல் நிலைய போலீசார் ரமேஷ் பாபுவை செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனர்.