நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட ராமாயனசின்னஹள்ளியைச் சேர்ந்த 56 வயது பனை மர தொழிலாளி நேருஜி, திங்கட்கிழமை மாலை வீட்டின் அருகே உள்ள பனை மரத்தில் நுங்கு வெட்ட ஏறியபோது, மரத்தின் அருகிலிருந்த மின்கம்பி மீது பனை மட்டைகள் விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொப்பூர் காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.