தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கோட்டை தெருவில் உள்ள அருள்மிகு ஶ்ரீ பர்வதாம்பாள் சமதே பரமேஸ்வரன் திருக்கோயிலில், நவம்பர் 05, புதன் கிழமை அன்று ஐப்பசி மாத பவுர்ணமி சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வில்வ இலை மாலை, சந்தனம், குங்குமம், தயிர், இளநீர், விபூதி போன்ற பூஜை பொருட்களை கொண்டு வந்து பூஜையில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.