தருமபுரி மாவட்டம், அரூரில் கடந்த 17ம் தேதி குடும்பத் தகராறு காரணமாக மனைவி மகாலட்சுமியை கொடூரமாக கொலை செய்த கணவர் வெங்கடேஷ், நான்கு நாட்களாக தலைமறைவாக இருந்தார். அவரைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர், பர்கூரில் பதுங்கியிருந்த அவரை நேற்று வெள்ளிக்கிழமை (நவ. 21) கைது செய்தனர். இன்று சனிக்கிழமை அவரிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.