தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, நிலத்தகராறு காரணமாக திரௌபதி என்ற பெண்ணை நாகேஷ் என்பவர் கல்லை கொண்டு தாக்கி படுகாயப்படுத்தியுள்ளார். திரௌபதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பாலக்கோடு காவல்துறையினர் நாகேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.