தர்மபுரி: அரசு பள்ளியில் திருடிய நபர்கள் கைது

0பார்த்தது
தர்மபுரி: அரசு பள்ளியில் திருடிய நபர்கள் கைது
தருமபுரி, பாலக்கோடு அருகே சோமனஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நவம்பர் 01ம் தேதி தலைமையாசிரியரின் அறையின் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர், பிரிண்டர் திருடு போனது. இது தொடர்பாக பாலக்கோடு காவலர்கள் பரத்குமார்(19), யோகக்குமார்(20), பார்த்தசாரதி(20), ரமேஷ்(20) மற்றும் 18 வயது சிறுவன் என 5 பேரை ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய கார்கள், லேப்டாப் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி