தருமபுரியில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே,
பாஜக மகளிர் அணியினர்
திமுக அரசின் பெண்கள் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் ராதிகா, மாவட்ட தலைவர் கலையரசி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,
பாஜக மாவட்ட தலைவர் சரவணன், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு,
திமுக ஆட்சியை வரும் தேர்தலில் தோற்கடித்து வீட்டிற்க்கு அனுப்ப வேண்டும் என கண்டன உரையாற்றினர்.