தர்மபுரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நகராட்சிக்கு உட்பட்ட 10 மற்றும் 11வது வார்டுகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் புகுந்தது. பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், இன்று காலை 11க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் காவல்துறையினர் போராட்டத்தை கலைத்தனர்.