தர்மபுரியில் அரிசி ஆலையில் பணிபுரிந்த மாரிமுத்து, கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சரக்கு வாகனம் மோதி படுகாயமடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை மாலை உயிரிழந்தார். அதியமான்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.