தர்மபுரி: பண மோசடி செய்த தனியார் பள்ளி தாளாளர் கைது

81பார்த்தது
தர்மபுரி: பண மோசடி செய்த தனியார் பள்ளி தாளாளர் கைது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் செம்முனி தனியார் பள்ளி தாளாளர். இவர் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த அமிர்தவள்ளியிடம் ரூ. 15 லட்சம் பெற்று கொண்டு பள்ளியை ஒப்பந்த அடிப்படையில் நடத்தி கொள்ள எழுதி கொடுத்தார். 

அதில் வரும் லாப வருமானத்தில் 10 சதவீதம் வழங்க வேண்டும் என செம்முனி தெரிவித்தார். இந்த நிலையில் பள்ளியை நடத்தி வந்த அமிர்தவள்ளிக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பணத்தை திருப்பி கொடுக்கும்படி செம்முனியிடம் கேட்டுள்ளார். பணத்தை கொடுக்காமல் இருந்து வந்தார். இது குறித்து கடந்த மாதம் 19-ந்தேதி ஏ. பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் அமிர்தவள்ளி புகார் செய்தார். அதன் பேரில் தோழர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அப்போது செம்முனி பணம் பெற்று கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து ஏ. பள்ளிப்பட்டி காவலர்கள் செம்முனியை நேற்று (டிச.30) கைது செய்தனர்

தொடர்புடைய செய்தி