கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திண்டலானூர் பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் பழங்குடி மக்கள், இறந்துவிட்டவர்களின் உடல்களை ஆற்றங்கரைகளில் புதைத்து வந்தனர். இப்பகுதியில் உள்ள மயான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கடத்தூர் வருவாய் ஆய்வாளர் சண்முகப்பிரியா, கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.