தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு 200 கிலோ குட்கா கடத்தி வந்த சரக்கு வாகன ஓட்டுநர் அருள், செவ்வாய்க்கிழமை மாலை ஆலமரத்துப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். உதவி காவல் ஆய்வாளர் மாரி தலைமையிலான குழுவினரால் பிடிக்கப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெங்களூரில் இருந்து குட்காவை கடத்தி வந்தபோது காவலர்கள் வாகனத்தை பறிமுதல் செய்திருந்தனர்.