சொந்த பணத்தை செலவழித்து உழைத்த தன்னை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏமாற்றிவிட்டதாக நடிகர் மன்சூர் அலிகான் குற்றம்சாட்டியுள்ளார். தான் பதவிக்கோ லாபத்திற்கோ ஆசைப்படுபவன் என்றும், ஆனால் தன்னை பாஜகவிடம் அடகு வைத்து சீமான் பணம் பெற்று கொண்டதாகவும் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாதக சார்பில் போட்டியிட்ட அவர், தற்போது இத்தகைய குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.