திண்டுக்கல் புறநகர் DSP. சங்கர் உத்தரவின் பேரில், தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த சுரேஷ்குமார் (24), அமிதேஷ் கார்த்திக் (20), சஞ்சய் (19) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த 3 பேர் மீதும் மதுரை, தேனி மாவட்டங்களில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன.