தும்மிச்சம்பட்டி: கடன் தொல்லையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

57பார்த்தது
தும்மிச்சம்பட்டி: கடன் தொல்லையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் தும்மிச்சம்பட்டி புதூர் ஏழாவது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் 28 வயதான ராஜ்குமார் தனது தாய் தந்தையுடன் இதே பகுதியில் வசித்து வருகிறார். திருமணம் ஆகவில்லை. ராஜ்குமார் தனியார் நிதி நிறுவனத்தில் பணி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜ்குமார் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்ததாகவும், இன்று காலை வரை வீட்டில் கதவு திறக்காததால் உறவினர்கள் வீட்டின் கதவை தட்டிப் பார்த்தனர். கதவு திறக்காததால் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த பொழுது ராஜ்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து ஒட்டன்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்குழுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் எதற்காக உயிரிழந்தார் என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி