திண்டுக்கல்லில் கடந்த மாதம் வழிப்பறி வழக்கில் சரவணகுமார் (40) மற்றும் கண்ணன் (22) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் சரவணன், மாவட்ட எஸ்பி. பிரதீப் பரிந்துரையின் பேரில், இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.