திண்டுக்கல் சின்ன அய்யங்குளம் பகுதியில் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க வந்தபோது, 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு திடீரென புகுந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். அப்பகுதி இளைஞர்கள் விரைந்து செயல்பட்டு பாம்பை உயிருடன் பிடித்து தீயணைப்புத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.