திண்டுக்கல்லைச் சேர்ந்த சரவணன், சமூக வலைதளத்தில் சிங்கப்பூரில் அதிக சம்பளத்துடன் ஹோட்டல் வேலைவாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து ஏமாந்தார். போலியான நிறுவனத்தின் பெயரைக் கூறி, பதிவுக்கட்டணம், நேர்காணல் கட்டணம் எனப் பல தவணைகளில் ரூ.6 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளனர். தொடர்பு கொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரவணன், திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ADSP தெய்வம் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.