தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசுத் துறைகளில் நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணிபுரிபவர்களை பணியிட மாற்றம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் காவல் சரகத்திற்கு உட்பட்ட திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் பணியாற்றும் 111 சார்பு ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் துறை துணைத் தலைவர் சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.