திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே பழனி தேசிய நெடுஞ்சாலையில், செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் தாக்கியதாகவும், அதிகாரிகள் மிரட்டியதாகவும் கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.