திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 18 வயது பூர்த்தியடைந்த, முதன்முறையாக வாக்களிக்க உள்ள கல்லூரி மாணவ, மாணவியர் 20 பேருடன் 'Coffee with Collector' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகள், வாக்காளர் பட்டியல் திருத்தம், கணக்கெடுப்புப் படிவம், சிறப்பு சுருக்கத் திருத்தம் போன்ற அம்சங்கள் குறித்து ஆட்சியர் விளக்கினார்.