திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், திண்டுக்கல் எம். வி. எம். அரசு மகளிர் கலைக்கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட மாணவியர் 25 பேருடன் ‘Coffee with Collector’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி இணைப்பேராசிரியர் சண்முகப்பிரியா மற்றும் மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் (கல்வி) சரவணக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கலந்துரையாடல், மாணவியரின் கருத்துக்களையும், தேவைகளையும் நேரடியாக அறிந்துகொள்ளும் நோக்கில் நடத்தப்பட்டது.