திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில், மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான எஸ்.ஐ.ஆர். ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கழகப் பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் தலைமை தாங்கி ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் மாநில கழக அமைப்பு செயலாளர் வி. மருதராஜ், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி. பி. பி. பரமசிவம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னம்பட்டி பழனிச்சாமி, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சி. எஸ். ராஜ்மோகன், மற்றும் நகர ஒன்றிய பேரூர் கழக சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.