திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செ. சரவணன், அனைத்து விவசாயிகளும் தங்கள் நில விவரங்களை நிலப் பதிவேட்டில் (Farmers Registry) பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். பி. எம். கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவி தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய, விவசாயிகள் உடனடியாக இந்தப் பதிவினை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.