12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்/மாணவியருக்காக முதற்கட்ட 'மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்' திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரத்தில் 28.05.2025 அன்று நடைபெற்றது. இம்முகாமில் 189 மாணவர், மாணவியர் கலந்துகொண்டனர்.
தற்போது, பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் இன்னும் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர், மாணவியர் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர், மாணவியருக்காக இரண்டாம் கட்டமாக 'மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்' திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரத்தில் 17.06.2025 (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 03.00 மணி முதல் 06.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 300 மாணவர்/மாணவியர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிறப்பு குறைதீர் முகாமில் இதுவரை உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற/தேர்ச்சி பெறாத மாற்றுத்திறனாளிகள், பட்டியல்/பழங்குடியின வகுப்பினர், ஆதிதிராவிடர்/பழங்குடியின விடுதி மற்றும் கள்ளர் சீரமைப்புத் துறை விடுதிகளில் பயின்ற மாணவர்/மாணவியர், உயர்கல்வியைத் தொடருவதற்கான உதவி தேவைப்படும் மாணவர்/மாணவியர் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.