திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரம், கணபதி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த வித்யாதரன் மகன் விக்னேஷ் (29) என்பவரை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி, சார்பு ஆய்வாளர் வனிதா மற்றும் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.