மாதம் 6000 உதவித்தொகை வேண்டி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

478பார்த்தது
மாதம் 6000 உதவித்தொகை வேண்டி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தமிழக அரசு வழங்கும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.1500-லிருந்து ரூ.6000 ஆக உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர அரசு வழங்குவதைப் போல் உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சாலையில் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி