திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் (31) மற்றும் தளபதி (24) ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். விக்னேஷ், சப் இன்ஸ்பெக்டர் ஜான்சனை அரிவாளால் வெட்டி தப்பி முயன்றபோது DSP கார்த்திக் காலில் சுட்டு பிடித்தார். தளபதி வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டார். இருவரையும் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.