கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளில் பூக்கும் ஜெர்ரி மலர்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. இலைகள் இன்றி மலர்கள் மட்டுமே பூத்துக் குலுங்கும் இந்த அழகிய காட்சியை சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கண்டு ரசித்து வருகின்றனர். பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படும் இந்த மலர்கள், ஆண்டுதோறும் ஆகஸ்ட், செப்டம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பூக்கும். பொதுமக்கள் இவற்றை 'சுவிஸ் மலர்கள்' என்றும் அழைக்கின்றனர்.