கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணை, பம்பிள் டேட்டிங் ஆப் மூலம் பழகிய தனுஷ், தனது நண்பருடன் சேர்ந்து காரில் கடத்திச் சென்று, மிரட்டி ஒரு பவுன் மோதிரம், பிரேஸ்லெட், செயின் மற்றும் ரூ. 90 ஆயிரத்தை பறித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் தனுஷை கைது செய்தனர். தனுஷ் திண்டுக்கல் போலீஸ் டிஎஸ்பி தங்கப்பாண்டியனின் மகன் என்பது தெரியவந்துள்ளது.